இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் 209.706 கிலோ பாப்பி உமியை (போதைப்பொருள்) காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார் . இது குறித்து இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் பஞ்சாப் குர்தாஸ்பூரில் வசித்து வந்த சுக்தீப் சிங் (24) மற்றும் ககன் தீப் ஷராம் (20) என தெரியவந்துள்ளது. இன்று அதிகாரி 2.40 மணியளவில் லாரிகளை சோதனை செய்ததில் இந்த பாப்பி உமி கண்டுபிடித்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ரவ் சிங் தெரிவித்துள்ளார்.
சுக்தீப் சிங் மற்றும் ககன் தீப் ஷராம் ஆகியோர் 209.706 கிலோ பாப்பி உமி பறிமுதல் செய்யப்பட்ட பின்பு, பூந்தர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் 15 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து சட்டவிரோதத்தை கொண்டு வந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.